Sunday, April 15, 2012

ஷாருக்கானும் -இராமேஸ்வரம் மீனவனும்

நாம் இப்போது ஷாருக்கானுக்கும் -இராமேஸ்வரம் மீனவனுக்கும் ஒரு ஒப்பீடு செய்யப்போகிறோம், அதாவது ஒற்றுமை வேற்றுமைகளை காணப்  போகின்றோம். இது என்ன முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சி? என்று நீங்கள் நினைக்கலாம், தொடர்ந்து படித்தால் புரியும்..


 ஷாருக்கான்:
இவர் ஒரு இந்திய குடிமகன். பிரபலமான திரைப்பட நடிகர், செல்வந்தர்.
இவர் நேற்று தனி விமானத்தில் இந்தியாவிலிருந்து நியூ யார்க் அருகில் உள்ள White Field விமான நிலையத்திற்கு வந்து இறங்குகிறார், அவரை குடியுரிமை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து விசாரணை செய்கிறார்கள், இறுதியில் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்படுகிறார். இதே போல அவருக்கு முன்னொரு முறை 2009 இல் நடந்துள்ளது என்றாலும்ஷாருக்கான் அடிக்கடி அமெரிக்காவிற்கு படபிடிப்பிற்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வந்து போய் கொண்டுதான் இருக்கிறார்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இந்திய அரசாங்கம் மிகுந்த கவலையும் கோபமும் கொண்டது, ஒரு இந்திய குடிமகனுக்கு நிகழ்ந்த அவமானமாக கருதியது. இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் கிருஷ்ணா ரஷ்யாவிலிருந்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் , வாஷிங்டன்னிலிருந்து இந்திய தூதர் நிருபமா ராவ் ஒரு படி மேலே சென்று அமெரிக்க அரசாங்கத்தின் விளக்கம் கேட்டு கண்டனத்தை தெரிவித்தார். இறுதில் அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கோரியது.அதை ஏற்றுகொண்ட இந்திய அரசு இது போல இனிமேல் நிகழாவண்ணம் இருக்கவேண்டும் என்று அமெரிக்க அரசை அறிவுறித்தியது.தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியதே ..!!


இராமேஸ்வரம் மீனவன்:

இவரும் ஒரு இந்திய குடி மகன். செல்வந்தர் அல்ல, தினசரி சாப்பாட்டிற்காக கடலில் மீன் பிடிப்பவர்.


இவரும் இவரை சேர்ந்த சொந்தங்களும் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். உடனே இவர் இலங்கை கடற் படையால் சுட்டுக்கொள்ளபடுகின்றார்.இறந்த உடலோடு கரை திரும்பும் இவரது சொந்தங்கள் அழுகிறார்கள், அவரது மனைவியும் குழந்தைகளும் பிணத்தின் மேல் விழுந்து துடிக்கிறார்கள். மீனவர் சமூகம் நீதி கேட்டு போராடுகிறது.


தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசு, தனது குடி மகன் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டாலே கொதித்து எழும் இந்திய அரசு இராமேஸ்வரத்தில் நடப்பவை வேறு ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போல மவுனம் சாதிக்கிறது. நாடாளு மன்றத்தில் இந்த பிரச்சனையை MP -க்கள் பேசும் போது விளக்கம் அளித்த கிருஷ்ணா " மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து விட்டார்கள் , அதனால் இலங்கை கடற் படை சுட்டு விட்டது " என்று விளக்கம் அளிக்கின்றார். இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் இருந்து எந்த ஒரு கண்டனமும் விளக்கமும் கேட்கப் படவில்லை.


வேற்று நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மும்பை நகர மக்களை இஷ்டம் போல சுட்டுக் கொன்றான்,அப்படிப்பட்ட தீவிரவாதியையே உயிரோடு பிடித்து இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடலில் அத்து மீறி எல்லைக்குள் நுழைந்து விட்டார்கள் அதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று இந்திய அரசு இந்திய மீனவன் இறப்பிற்கு விளக்கம் அளிக்கிறது, இலங்கை அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை , இந்திய அரசு எந்த ஒரு விளக்கமும் கேட்டவில்லை.


வழக்கம் போல சினிமா, கிரிக்கெட் மற்றும் மலிவான அரசியல் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக, இந்திய ஊடகங்கள் மீனவன் இறந்த செய்திக்கும் அதற்கான இந்திய அரசின் ஜீரோ நடவடிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.


இப்படி தனது குடிமகன்களில், ஒருவர் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கொதித்து எழுந்தும் இன்னொருவர் சுடப்பட்டு இறந்த பின்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் என்ன நியாயம்? எப்படி இந்திய ஒருமைப் பாட்டின் மீதும் இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வரும்?
ஒருவேளை அந்நிய அரசால் சுட்டுக் கொல்லப்படும் நபர் பிரபலமான நடிகராகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ அல்லது வாய் சவடால் விடும் அரசியல் வாதியாகவோ இருந்தால் தான் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமோ ?





8 comments:

  1. சரியான கேள்வி.......
    இந்திய அரசே தமிழன் என்ன இழிச்சவாயன் எண்டா நினைத்தாய்.? ஒன்றுபடு தமிழினமே போரிட நீ............................

    ReplyDelete
  2. Sharukhan: didn't enter US illegally and he was not stealing anything.

    Rameshwaram Fishermen: now you know why they are different from Sharuk

    ReplyDelete
    Replies
    1. Correct.. so with out giving any chance or inquire or explanation just shoot and kill the poor fishermen? Even terrorists are given chance to explain their side.Kasab (Mumbai shooting) is still in jail and attending court.

      Delete
    2. Sivathy: the main reason Rameshwaram fishermen got killed is LTTE used them as a cover (like using indian boats or faked like indian fisherman) to attach SL Navy. You have no idea how many navies were killed. So the best way for SL navy to keep the seal clear of all boats.
      And Indian fishermen were main route for fuel and medicine to LTTE. If you were a SL Navy, i don't think you will want to treat an Indian Fisherman with normal formalities.
      LTTE must have killed about 5000+ navy men in Sea.

      Delete
    3. I am talking about the incidents happened after LTTE is gone.
      Since May 2009 whole SriLanka is controlled by the government and there is no LTTE. There are so many fishermen died between 2009 May and till date, blaming LTTE for that makes no sense.

      Delete
  3. உண்மையிலேயே தழிழன் இழிச்சவாயன் தானப்பா. இல்லை என்றால் இவ்வளவு மீனவர்கள் இறந்திருப்பார்களா? தழிழனாய் இருந்து கொண்டே சாருக் புகழ்பாடும் கருப்பாடுகள் இருக்கும்வரை நீங்கள் எல்லாம் எதுவும் செய்ய முடியாது சிவதி.

    ReplyDelete
  4. mr.sharuk above comparison are just like that only.
    but the matter is how should be handled this situation only.
    that's the symbol of matter. i like above comments it's true ( panaggottai & sivathy).mr.sharuk you don't Appreciate this matter but don't discourage this.

    ReplyDelete
  5. நெத்தியடி. பதில்தான் நமக்கு கிடைக்காது.

    ReplyDelete