
இந்த லீவ் லெட்டர்யை மனப்பாடம் செய்ய வைத்த ஆசிரியர் Suffering என்ற வார்த்தையை விளக்கவும் இல்லை , லீவ் லெட்டர் என்றால் என்ன? அதை எந்த format இல் எழுத வேண்டும் என்று சொல்லவும் இல்லை. இது ஆங்கில பாடத்தின் கதி என்றால் , வரலாறு , அறிவியல் அனைத்தும் இதே போலத்தான்.பானிப்பட் போர் சிறு குறிப்பு வரைக, நியூட்டனின் இரண்டாம் விதியை விளக்கு இவையெல்லாம் அந்த வகையில் சேர்ந்தவைதான்.
அனேகமாக எல்லா அரசு பள்ளிகளிலும் படித்த மாணவர்களின் கதி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் மனப்பாடம் என்பது பொதுவான ஒரு அம்சமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளது எனபது என் கருத்து. தற்போது நிறைய தனியார் பள்ளிகளில் +1 subject களை எடுக்காமல் நேராக +2 subject களை எடுப்பதாக கேள்விப்படுகிறேன். என்ன கொடுமை இது? அதே போல் கோடை விடுமுறையும் கிடையாது. நமது தமிழ் நாட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்வி முறை மற்றும் தரம் ஆரோக்கியமாக இல்லை என்பதே எதார்த்தம்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் உள்ள ஒரு பள்ளியையும் அதன் கல்வி முறையையும் இந்தியா போன்ற வளரும் நாட்டின் பள்ளியுடன் ஒப்பிட முடியாது என்றாலும் , சமீபத்தில் நான் இங்குள்ள ஒரு பள்ளியை சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது , நான் சின்ன வயதில் இந்த பள்ளியில் படிக்காமல் போய்விட்டேனே என்று. அதுவும் நான் சென்ற பள்ளி முற்றிலும் புதுமையாக கிட்டத்தட்ட நம்முடைய குருகுல கல்வி போல தோன்றியது.
இந்தப் பள்ளியின் பெயர் "Goodwillie Environmental School" , இது Grand Rapids -க்கு அருகில் Ada என்ற ஊரில் உள்ளது. Amway Company யின் Head Quarters -ம் இந்த ஊர் தான்.இந்த பள்ளியும் அரசாங்க பள்ளிதான். காலை 7.45 am க்கு பள்ளி தொடங்குகிறது. School Bus அரை மைல் முன்பாகவே மாணவர்களை இறக்கி விட்டு விடுகிறது, அனைவரும் காட்டுப் பாதை வழியாக நடந்து ( வெயிலோ , மழையோ, பனியோ ) பள்ளியை அடைகிறார்கள்.
திட்டமிட்ட period schedule எதுவும் இல்லை. அன்று போன பின்தான் என்ன நடத் தப்போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு தெரியும். Photography யில் பிரபலமான ஒருவர் வருகிறார். ஒரு class யை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு digital camera வை கொடுத்து வெளியில் போய் Photo எடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். ஒரு மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்கிறார்.
இன்னொரு class மாணவர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் அமர்ந்து, கேட்கும் பறவை ஒலிகளை இனம் கண்டு தங்கள் குறிப்பில் எழுதுகிறார்கள். இன்னொரு குரூப் மாணவர்கள் சுட்ட செங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய வகுப்புகள் இவர்கள் செய்த செங்கல்லால் கட்டப்பட்டவை என்பதை நம்ப முடியவில்லை.




" கல்வி சிறந்த தமிழ்நாடு .." என்ற பாரதியின் வரிகள் நகைப்பிற்குரியதாகிவிடும்..!!!
இந்த பள்ளியின் இணைய முகவரி: http://fhps.us/goodwillie/
(நன்றி: புகைப்படங்கள் Google லிருந்து எடுக்கப்பட்டவை.)
unga school-la "As I am" illaiya?
ReplyDeleteநீங்க என்ன விட நல்லா மனப்பாடம் செஞ்சியிருப்பிங்க போல..!! Sorry... "As" miss பண்ணிட்டேன், மாற்றிவிடுகிறேன்.
ReplyDeleteஎன்ன பண்றது...நமக்கு வாய்த்த அரசு இப்படி
ReplyDeleteநாம் இந்த அனைத்தையும் மாற்ற வேண்டும்
ReplyDelete