Sunday, March 4, 2012

Sir, I am suffering from fever..

"Sir, As I am suffering from fever " என்ற இந்த வாக்கியத்தை எவ்வளவு பேர் குருட்டு மனப்பாடம் செய்து ஒரு நாள் விடுமுறை தரும்படி பள்ளி ஆங்கிலத்  தேர்வில் கேட்கப்பட்ட லீவ் லெட்டர் கேள்விக்கு பதில் எழுதினீர்கள் என்று எனக்கு தெரியாது,  ஆனால் என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் குருட்டு மனப்பாடமாக இதை எழுத வைக்கப்பட்டேன் . அந்த மனப்பாடத்தின் பாதிப்பு இன்றளவும் உள்ளது,  இப்போதும் I am suffering  என்றவுடன் from fever என்று அனிச்சையாக கை எழுதுகிறது.

இந்த லீவ் லெட்டர்யை மனப்பாடம் செய்ய வைத்த ஆசிரியர் Suffering என்ற வார்த்தையை விளக்கவும் இல்லை , லீவ் லெட்டர் என்றால் என்ன? அதை எந்த format  இல் எழுத வேண்டும் என்று சொல்லவும் இல்லை.  இது ஆங்கில பாடத்தின் கதி என்றால் , வரலாறு , அறிவியல் அனைத்தும் இதே போலத்தான்.பானிப்பட் போர் சிறு குறிப்பு வரைக, நியூட்டனின் இரண்டாம் விதியை விளக்கு இவையெல்லாம் அந்த வகையில் சேர்ந்தவைதான்.

அனேகமாக எல்லா அரசு பள்ளிகளிலும் படித்த மாணவர்களின் கதி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு தெரியவில்லை,  இருந்தாலும் மனப்பாடம் என்பது பொதுவான ஒரு அம்சமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளது எனபது என் கருத்து. தற்போது நிறைய தனியார் பள்ளிகளில் +1 subject களை எடுக்காமல் நேராக +2 subject களை எடுப்பதாக கேள்விப்படுகிறேன். என்ன கொடுமை இது? அதே போல் கோடை விடுமுறையும் கிடையாது.  நமது தமிழ் நாட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்வி முறை மற்றும் தரம் ஆரோக்கியமாக இல்லை என்பதே எதார்த்தம்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் உள்ள ஒரு பள்ளியையும் அதன் கல்வி முறையையும் இந்தியா போன்ற வளரும் நாட்டின் பள்ளியுடன் ஒப்பிட முடியாது என்றாலும் , சமீபத்தில் நான் இங்குள்ள ஒரு பள்ளியை சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது ,  நான் சின்ன வயதில் இந்த பள்ளியில் படிக்காமல் போய்விட்டேனே என்று. அதுவும் நான் சென்ற பள்ளி முற்றிலும் புதுமையாக கிட்டத்தட்ட நம்முடைய குருகுல கல்வி போல தோன்றியது.  

இந்தப் பள்ளியின் பெயர் "Goodwillie Environmental School" ,  இது Grand  Rapids -க்கு அருகில் Ada  என்ற ஊரில் உள்ளது. Amway Company  யின் Head Quarters -ம் இந்த ஊர் தான்.இந்த பள்ளியும் அரசாங்க பள்ளிதான். காலை 7.45 am  க்கு பள்ளி தொடங்குகிறது. School  Bus அரை மைல் முன்பாகவே மாணவர்களை இறக்கி விட்டு விடுகிறது, அனைவரும் காட்டுப் பாதை வழியாக நடந்து ( வெயிலோ , மழையோ, பனியோ  )  பள்ளியை அடைகிறார்கள்.

திட்டமிட்ட period schedule  எதுவும் இல்லை. அன்று போன பின்தான் என்ன நடத் தப்போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு தெரியும். Photography  யில் பிரபலமான ஒருவர் வருகிறார். ஒரு class யை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு digital camera வை கொடுத்து வெளியில் போய் Photo  எடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். ஒரு மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்கிறார்.

இன்னொரு class மாணவர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் அமர்ந்து,  கேட்கும் பறவை ஒலிகளை இனம் கண்டு தங்கள் குறிப்பில் எழுதுகிறார்கள். இன்னொரு குரூப் மாணவர்கள் சுட்ட செங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய வகுப்புகள் இவர்கள் செய்த செங்கல்லால் கட்டப்பட்டவை என்பதை நம்ப முடியவில்லை.

Capital, dividend , operating cost  ,marketing  போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் எனக்கு  அர்த்தம் தெரிய ஆரம்பிக்கும் போது எனக்கு கழுதை வயதாகி இருந்தது. இந்த பள்ளியில் ஐந்தாவது , ஆறாவது படிக்கும் குழந்தைகள் சேர்ந்து ஒரு சின்ன கோழிப் பண்ணையை (சுமார் முப்பது  கோழிகள் ) நடத்துகிறார்கள். மாணவர்களே கோழிப் பண்ணையின் CEO வாக அவர்களுள் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். Finance, Sales, Budgeting, Operations போன்ற குழுக்களை பிரித்து நிர்வாகம் செய்கிறார்கள். ஒரு brand  பெயரையும் தேர்வு செய்து இங்குள்ள உள்ளூர் கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இந்த வயதிலேயே ஒரு டஜன் முட்டைக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதை தெரிந்து இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகம் என்பதற்கு பல கலைகளை ஒரே இடத்தில் கற்பிக்கும் இடம் என்று பொருள். அதாவது இலக்கியம், அறிவியல் , மருத்துவம் , பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளை உள்ளடிக்கிய ஒரு கல்வி நிறுவனமே  பல்கலைக்கழகம். ஆனால் இன்றைய தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களின் நிலை என்ன?  Dr.MGR Medical University வெறும் தேர்வுகளை நடத்தும் ஒரு நிறுவனமாக உள்ளது. எதாவது மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சி நடைபெறுகிறதா? புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததா?  இல்லை என்பதே இதற்கான பதில். இதே நிலைதான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் - தேர்வு நடத்தும் ஒரு தேர்வாணையம்.

இப்படிப்பட்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்களின் திறமை, எண்ணங்கள், உழைப்பு எப்படி இருக்கும்? அரசியல்வாதிகளும் , கல்வி துறையின் பெரும் பதவிகளில் வகிப்பவர்களும் தங்கள் சுய லாபத்திற்காக அவர்களது புகழ் பாடும் பாடங்களை பாடத்திட்டத்தில் புகுத்துகிறார்கள். இதை படிக்கும் மாணவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால்

" கல்வி சிறந்த தமிழ்நாடு .."  என்ற பாரதியின் வரிகள் நகைப்பிற்குரியதாகிவிடும்..!!!  

இந்த பள்ளியின் இணைய முகவரி: http://fhps.us/goodwillie/

(நன்றி:  புகைப்படங்கள் Google  லிருந்து எடுக்கப்பட்டவை.)


4 comments:

  1. நீங்க என்ன விட நல்லா மனப்பாடம் செஞ்சியிருப்பிங்க போல..!! Sorry... "As" miss பண்ணிட்டேன், மாற்றிவிடுகிறேன்.

    ReplyDelete
  2. என்ன பண்றது...நமக்கு வாய்த்த அரசு இப்படி

    ReplyDelete
  3. நாம் இந்த அனைத்தையும் மாற்ற வேண்டும்

    ReplyDelete